24 6611024b21f1f
இலங்கைசெய்திகள்

கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை

Share

கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை

கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்ட பிரதேச செயலாளர்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான விஷேட கலந்துரையாடலில் கலந்து கொண்டபோதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்படி, கிராம அலுவலருக்கு வழங்கப்பட்ட அலுவலக கொடுப்பனவு மற்றும் எழுதுபொருள் கொடுப்பனவு 01.04.2024 முதல் பின்வருமாறு திருத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மாதாந்த அலுவலக கொடுப்பனவு மாநகர சபை அல்லது நகரசபை பிரதேசத்தில் ரூபா 3000 ஆகவும் பிரதேச சபை பகுதியில் 2000 ரூபாவாகவும் திருத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆண்டுக்கான எழுதுபொருள் உதவித் தொகை 3000 ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பாக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்கு அமைச்சர் சபையின் அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக அசோக பிரியந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...