24 6611fd28e76fe
இலங்கைசெய்திகள்

சுங்க வரி செலுத்தத்தவறியுள்ள அரச நிறுவனங்கள்

Share

சுங்க வரி செலுத்தத்தவறியுள்ள அரச நிறுவனங்கள்

ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட 41 அரச நிறுவனங்கள் கடந்த வருடம் (2023) டிசம்பர் 31ஆம் திகதி வரை 58.6 பில்லியன் ரூபா சுங்க வரி செலுத்தத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

01 மற்றும் 05 வருடங்களுக்கு இடையில் இந்த அரச நிறுவனங்களால் செலுத்தப்படாத சுங்க வரித் தொகை 1.61 பில்லியன் ரூபாவாகும்.

5 முதல் 15 வருடங்களுக்கு இடையில் 56.99 பில்லியன் ரூபா சுங்க வரிப் பணமாக ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, கைத்தொழில் மற்றும் வர்த்தகம், சுகாதாரம், கல்வி, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி, நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி, பொருளாதார அபிவிருத்தி, அனர்த்த முகாமைத்துவம், மதம், கலாச்சாரம் மற்றும் இளைஞர் விவகார அமைச்சுக்கள் சுங்க வரி செலுத்த தவறியுள்ளன.

மேலும், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு, துறைமுகங்கள், தேசத்தை கட்டியெழுப்புதல், கடற்றொழில், விளையாட்டு, மின்சாரம் மற்றும் எரிசக்தி, தொழில்சார் மற்றும் கைத்தொழில் பயிற்சி, மீள்குடியேற்றம், சுற்றுச்சூழல், பாதுகாப்பு, சுற்றுலா, போக்குவரத்து, சமூக சேவைகள், வெகுஜன ஊடகம், விவசாயம், கூட்டுறவு, நகர அபிவிருத்தி ஆகிய அமைச்சுகள் வரி செலுத்தவில்லை என கூறப்படுகின்றது.

இலங்கை இராணுவம், நிதியமைச்சு, பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியனவும் சுங்க வரி செலுத்த தவறியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
1765079066 25 693273715360b md
இலங்கைசெய்திகள்

கண்டி – கொழும்பு ரயில் பயணிகளுக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள்!

கண்டி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக, நாளை (டிசம்பர் 8) காலை...

image 49051e3a6e 1
இலங்கைசெய்திகள்

நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி: “மகிழ்ச்சியாகத் தூங்கப் போனோம், மண்ணுக்குள் புதைந்தோம்” – தப்பியோர் அதிர்ச்சிப் பேட்டி!

மடுசீம பூட்டாவத்த பகுதியில் ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்த...

images 19
இலங்கைசெய்திகள்

அனர்த்த உயிரிழப்புகள் 627 ஆக உயர்வு: கண்டி மாவட்டத்தில் அதிக பாதிப்பு! 

நாடு முழுவதும் சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட மிக மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627...

image f1250cea24
அரசியல்இலங்கைசெய்திகள்

பூஸா சிறையில் அதிரடிச் சோதனை: 2 ஸ்மார்ட் போன்கள், 13 சிம் கார்டுகள் பறிமுதல்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின்போது 2 ஸ்மார்ட் தொலைபேசிகள், 13 சிம்...