இலங்கைசெய்திகள்

வடக்கு மற்றும் தெற்கு மக்களை ஏமாற்றிய வரலாறு கொண்ட ரணில்

Share
24 6607a035c8dc1
Share

வடக்கு மற்றும் தெற்கு மக்களை ஏமாற்றிய வரலாறு கொண்ட ரணில்

தென்பகுதி மக்களையும், வடபகுதி மக்களையும் ஏமாற்றிய வரலாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி (Chandima Weerakkody) குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் வடக்கு மக்களை இனியும் ரணில் விக்ரமசிங்கவால் ஏமாற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தாமே ஜனாதிபதி வேட்பாளர் என வலுக்கட்டாயமாக ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்த ரணில் விக்ரமசிங்க இன்று கூறுகின்றார்.

ஆனால் பொதுஜன பெரமுன ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக இதுவரை தெரிவு செய்யவில்லை. தென்பகுதி மக்களையம் வடபகுதி மக்களையும் ஏமாற்றிய வரலாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உண்டு.

எனவே வடக்கு மக்களை இனியும் அவரால் ஏமாற்ற முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியினால் வெறும் ஒன்றரை லட்சம் வாக்குகளை மாத்திரமே பெற முடியும்.

எனவே இவை அனைத்தும் ஏமாற்று செயற்பாடாகும். மக்களின் நிராகரிப்புக்குள்ளான இவர்களின் அரசியல் பயணத்திற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
20 7
உலகம்செய்திகள்

காசா மக்களுக்கு விழப்போகும் பேரிடி : காசாவின் முழு கட்டுப்பாட்டையும் கைப்பற்றும் இஸ்ரேல்

காசா (Gaza) பகுதியை முழுமையாகக் கைப்பற்றி, காலவரையின்றி அங்கு தங்கள் இருப்பை நிறுவும் திட்டத்தை இஸ்ரேலின்...

14 6
இலங்கைசெய்திகள்

தபால் வாக்குகள் தனியாக எண்ணப்பட மாட்டாது:வெளியான அறிவிப்பு

இன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது தபால் வாக்குகள் தனியாக எண்ணப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது....

13 6
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் 80 இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு

வவுனியாவில் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளினை மீட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார்...

15 6
இலங்கைசெய்திகள்

வெலிக்கடை சிறைக்குள் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு

வெலிக்கடைச் சிறைச்சாலையின் கழிவுநீர் வடிகாண் ஒன்றின் அருகே இருந்து கைத்துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது. வெலிக்கடைச் சிறைச்சாலையின் எல்...