இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து மில்லியன் கணக்கில் முட்டை இறக்குமதி

Share
tamilni 407 scaled
Share

இந்தியாவிலிருந்து மில்லியன் கணக்கில் முட்டை இறக்குமதி

பண்டிகை காலம் நெருங்குவதால் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கும் நியாயமான விலையில் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி முட்டை இறக்குமதிக்கான அமைச்சரவை அங்கீகாரம் இன்று (19) வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை நாட்டில் சந்தையை ஸ்திரப்படுத்துவதற்கு போதுமான அளவு முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, இந்தியாவில் இருந்து ஏப்ரல் மாதத்தில் 42 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன.

இந்நிலையில் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை உள்நாட்டு முட்டைகள் என விற்பனை செய்யும் மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் அண்மையில் விவசாய அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளில் இடப்பட்டுள்ள முத்திரையை அழித்து உள்நாட்டு முட்டைகள் என விற்பனை செய்யும் மோசடி இடம்பெறுவதாக உள்நாட்டு முட்டை வியாபாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...