இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியே ஜனாதிபதியை தீர்மானிக்கும்

2 1 scaled
Share

மொட்டு கட்சியே ஜனாதிபதியை தீர்மானிக்கும்

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ச நாடு திரும்பியுள்ளார்.

அமெரிக்காவில் சில காலம் தங்கியிருந்த பெசில் இன்றைய தினம் (5.3.2024) நாடு திரும்பியுள்ளார்.

நாடு திரும்பிய அவர் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி வலுவான நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பிள்ளைகளுடன் சில மாதங்கள் அமெரிக்காவில் தங்கியிருந்ததாகவும், புதிய உத்வேகத்துடன் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சியின் ஆதரவுடனான வேட்பாளரே வெற்றியீட்டுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொட்டு கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுகள் வழமையானவை எனவும் அரசியல் இது சகஜமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மாற்றங்கள் செய்ய வேண்டிய நேரத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் தோல்வியடைந்த போது நாட்டை விட்டு செல்வதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என பெசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

எந்த தேர்தல் நடத்தப்பட்டாலும் கட்சியின் ஒழுங்கமைப்பு பணிணகளை தாம் மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...