tamilni 9 scaled
இலங்கைசெய்திகள்

இந்தியாவுடன் இணங்க தயார்! டக்ளஸ் அறிவிப்பு

Share

இந்தியாவுடன் இணங்க தயார்! டக்ளஸ் அறிவிப்பு

இலங்கை மற்றும் இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் இணக்கப்பாட்டுடன் பேச்சுக்கள் நடத்தத் தயாராக உள்ளதாக தமிழ்நாட்டு மீன்வளத்துறை அமைச்சருக்கு இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்று(28) வருகை தந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்ட கடற்றொழிலாளர்கள் நன்னீர் மீன்பிடியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

இந்நிலையில் இலங்கை மற்றும் இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பிலான இரு நாட்டு அரசுகளதும் பேச்சுக்கள் முன்னேற்றம் ஏதும் இருக்கிறதா என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நேற்று முன்தினம்(27) தமிழ்நாட்டு மீன்வளத் துறை அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் தொலைபேசியில் பேசியிருந்தார்.

இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும் என்றார் அத்தோடு செவ்வாய் மாலை தாங்கள் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் கலந்துரையாடுவதாகவும் அவர் ஊடாக பாண்டிச்சேரி முதலமைச்சருடன் கலந்துரையாடுவதாகவும் எனக்கு கூறப்பட்டது.

அதேநேரத்தில், என்னையும் அந்தக் கலந்துரையாடலுக்கு நேரில் அல்லது தொலைபேசியில் கலந்து கொள்ள முடியுமா என்று கேட்கப்பட்டதற்கு நான் அதற்கு இணங்கியுள்ளேன்.

எனக்கு அவர்கள் உத்தரவாதம் தரவேண்டும் அத்தோடு அவர்களின் இழுவை மடிப்படகுகள் எங்கள் கடலுக்குள் வந்து வளங்களை சுரண்டுகின்ற மற்றும் அழிக்கின்ற எங்கள் கடற்தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்ற உத்தரவாதத்தினை தருவார்களாக இருந்தால் இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு தயாராக இருக்கின்றேன் இதுதான் பேச்சுக்கான அடிப்படை” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
death body
இலங்கை

கருங்குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் மரணம்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரம், பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்ற 67 வயதான...

mervin silva031
இலங்கை

வங்கி கணக்குகளில் மட்டும் இத்தனை கோடிகளா – மேர்வின் சில்வாவினால் இன்னும் பலருக்கு தலைவலி!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...