tamilni 591 scaled
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை தமிதாவுக்கு எதிராக வழக்கு

Share

சிங்கள நடிகை தமிதாவுக்கு எதிராக வழக்கு

பிரபல சிங்கள திரைப்பட நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவருக்கு எதிராக வழக்குத் தொடரும் முயற்சியொன்றை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கொரியாவுக்கு அனுப்புவதாகக் கூறி தமிதா அபேரத்னவும் அவரது கணவரும் 30 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

முறைப்பாடு தொடர்பில் விசாரணைக்கு வருமாறு பொலிஸாரால் வழங்கப்பட்ட நோட்டீஸ் புறக்கணிக்கப்பட்டமையினால் நீதிமன்றில் ஆஜராகுமாறு தமிதா மற்றும் அவரது கணவருக்கு நோட்டீஸ் வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும், பொலிஸாரின் அறிக்கையில் சந்தேகநபர்களாக இருவரும் பெயரிடப்படாததால் நீதிமன்றத்தால் அறிவித்தல் வழங்க முடியாது என கோட்டை நீதவான் திலின கமகே தெரிவித்தார்.

அத்துடன், உரிய முறையில் உத்தரவுகளை கோருமாறு கூறியுள்ள கோட்டை நீதவான் திலின கமகே, பொலிஸாரின் வேண்டுகோளின் பிரகாரம் நோட்டீஸ் வழங்க முற்பட்டால், எதிர்காலத்தில் வீதியில் செல்பவர்களுக்கும் நோட்டீஸ் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...