tamilni 591 scaled
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை தமிதாவுக்கு எதிராக வழக்கு

Share

சிங்கள நடிகை தமிதாவுக்கு எதிராக வழக்கு

பிரபல சிங்கள திரைப்பட நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவருக்கு எதிராக வழக்குத் தொடரும் முயற்சியொன்றை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கொரியாவுக்கு அனுப்புவதாகக் கூறி தமிதா அபேரத்னவும் அவரது கணவரும் 30 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

முறைப்பாடு தொடர்பில் விசாரணைக்கு வருமாறு பொலிஸாரால் வழங்கப்பட்ட நோட்டீஸ் புறக்கணிக்கப்பட்டமையினால் நீதிமன்றில் ஆஜராகுமாறு தமிதா மற்றும் அவரது கணவருக்கு நோட்டீஸ் வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும், பொலிஸாரின் அறிக்கையில் சந்தேகநபர்களாக இருவரும் பெயரிடப்படாததால் நீதிமன்றத்தால் அறிவித்தல் வழங்க முடியாது என கோட்டை நீதவான் திலின கமகே தெரிவித்தார்.

அத்துடன், உரிய முறையில் உத்தரவுகளை கோருமாறு கூறியுள்ள கோட்டை நீதவான் திலின கமகே, பொலிஸாரின் வேண்டுகோளின் பிரகாரம் நோட்டீஸ் வழங்க முற்பட்டால், எதிர்காலத்தில் வீதியில் செல்பவர்களுக்கும் நோட்டீஸ் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...