tamilni 589 scaled
இலங்கைசெய்திகள்

சத்திர சிகிச்சைகள் தொடர்பில் எச்சரிக்கை

Share

சத்திர சிகிச்சைகள் தொடர்பில் எச்சரிக்கை

அழகிற்காக பயிற்சி பெற்ற வைத்தியர்களின் தலையீடு இல்லாமல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வது உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை வைத்தியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், தகுதியற்ற வைத்தியர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் சங்கத்தின் சிறப்பு மருத்துவர்கள் குழு செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

நாட்டில் பல பயிற்சியற்ற மற்றும் தகுதியற்ற வைத்தியர்கள் வைத்திய துறையில் பணிபுரிவதாகவும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யும் போது அந்த வைத்தியர்கள் செயற்பாடு ஆபத்தினை ஏற்படுத்துவதாகவும் சங்கத்தின் சிறப்பு வைத்தியர் அமில ஷசங்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

“கண்டியில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலைகள் உலக சாதனை படைத்ததாக அண்மையில் செய்திகள் வந்தன. 62 வயது மூதாட்டி ஒருவரின் வயிற்றில் இருந்து 13.5 லிட்டர் எண்ணெயை கட்டியை அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் அகற்றியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வகை அறுவை சிகிச்சையில், 8 லிட்டருக்கு மேல் அகற்றப்படுவதில்லை. ஏனெனில் அது உயிருக்கு ஆபத்தானது. இது கொழுப்பு குறைப்பு அறுவை சிகிச்சை அல்ல. இது உடலின் வடிவத்தை மீட்டெடுக்கும் அறுவை சிகிச்சை.எனவே அழகை பெற உங்கள் உயிரை பணயம் வைக்காதீர்கள்.

இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளியின் நிலைமை மிகவும் மோசமாகி, பலமுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மோசமான நிலையில் இருக்கின்றார் என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...