tamilnaadi 133 scaled
இலங்கைசெய்திகள்

சனத் நிஷாந்தவின் பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பில் உத்தரவு

Share

சனத் நிஷாந்தவின் பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பில் உத்தரவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்திற்கான காரணத்தை தற்போதைக்கு வெளியிட முடியாது என வெலிசர நீதவான் துசித தம்மிக்க உடுவவிதான தெரிவித்துள்ளார்.

சனத் நிஷாந்தவின் பிரேத பரிசோதனை அறிக்கை சட்ட வைத்திய அதிகாரியினால் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்பதையும் நீதவான் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் கெரவளபிட்டிய பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பான வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, சனத் நிஷாந்தவின் மனைவி மரணத்திற்கான காரணத்தை அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதற்கமைய, சனத் நிஷாந்தவின் பிரேத பரிசோதனை அறிக்கை இதுவரை சட்ட வைத்திய அதிகாரியினால் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படாததால் அதனை வெளியிட முடியாது என தெரிவித்துள்ளார்.

மேலும், வாகன விபத்து இடம்பெற்ற இடத்தை பரிசோதிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், விபத்து இடம்பெற்ற தினத்தன்று (ஜனவரி 24 ஆம் திகதி) அந்த இடத்தை நேரில் பார்வையிட்டதாகவும் நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரியிடம் கோருமாறு கந்தானை பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதவான் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...