tamilnig 18 scaled
இலங்கைசெய்திகள்

விக்டோரியா அணை மீது இலகுரக வாகனங்கள் செல்வதற்கு அனுமதி

Share

விக்டோரியா அணை மீது இலகுரக வாகனங்கள் செல்வதற்கு அனுமதி

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் ஊடாக இலகுரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட அனுமதி வழங்கும் பிரேரணையொன்று கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மொரகஹமுல்லவுக்கும் அதிகாரிகமவுக்கும் இடையிலான போக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்கில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் அதற்கான அனுமதி மற்றும் இறுதித் தீர்மானத்தைப் பெறுவதற்காக பிரேரணையை மகாவெலிக்குப் பொறுப்பான அமைச்சுக்கு அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக விக்டோரியா அணையின் மீது வாகனம் ஓட்டுவது நிறுத்தப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் சுமார் 40 கிலோமீட்டர் தூரம் கூடுதலாக பயணிக்க வேண்டியுள்ளது.

விக்டோரியா அணையின் மீது வாகன போக்குவரத்து தற்போது மகாவலி அதிகாரசபை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இலகுரக வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கும் பாதுகாக்கப்பட்ட வலயத்திற்கும் இடையிலான பாதுகாப்புப் பணிகளே இதற்குக் காரணம்.

விக்டோரியா நீர்த்தேக்கம் விவசாயத்திற்கு நீர் பெறுதல், நீர் மின்சாரம் உற்பத்தி செய்தல் உள்ளிட்ட பல இலக்குகளை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், மக்கள் அங்கு செல்ல முடியாதவாறு அணையை தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றியதன் மூலம் அங்கு குடியிருந்த ஆரம்ப குடியிருப்பாளர்களுக்குப் பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அபிவிருத்திக்குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Featuredgughik
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்பட்டனர் முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகள்.

மலேசியாவில் கைது செய்யப்பட்ட முக்கிய பாதாள உலகக் குற்றவாளியான தனுஷ்க கௌசல்ய என்ற “ரத்மலானே சைமா”...

இஷாரா செவ்வந்தி
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டார் இஷாரா செவ்வந்தி!

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ருந்த சந்தேக நபரான இஷாரா...

சுரேஷ் சலே 10
இலங்கை

சுரேஷ் சலேயினால் முன்வைக்கப்பட்ட மனு மீதான விசாரணைகள் இம்மாதம் ௨௫ ஆம் திகதி!

அரச புலனாய்வுப் பிரிவு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே யினால் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத...

person calling the police
இலங்கை

தலைமறைவான கொலைக்குற்றவாளி – பொதுமக்களின் உதவியினை கோரிய காவல்துறை!

ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்பொல பகுதியில் பெண் ஒருவரைத் தாக்கிக் கொலை செய்த சம்பவம் தொடர்பில்...