tamilni 317 scaled
இலங்கைசெய்திகள்

அமெரிக்க சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு ஈர்க்க வேலைத்திட்டம்

Share

அமெரிக்க சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு ஈர்க்க வேலைத்திட்டம்

இலங்கைக்கு வருகை தரும் அமெரிக்கர்களை அதிகம் ஈர்க்கும் வகையில் பாரிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க மற்றும் ஏனைய தூதரக அதிகாரிகள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதற்காக அமெரிக்காவின் முன்னணி ஒன்லைன் பயண நிறுவனமான Expedia மற்றும் Qatar Airways ஆகியவற்றின் ஆதரவைப் பெற தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் இந்த திட்டம் ஜனவரி மாதம் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் நடுப்பகுதி வரை நடைபெற உள்ளது.

இந்த திட்டத்திற்கு 30,000 முதல் 50,000 டொலர் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன் அதற்கு Qatar Airways நிதியுதவி செய்கிறது.

இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக, இலங்கையில் சுற்றுலா விடுதிகள் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தூதரகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மூலம் 2023 ஆம் ஆண்டில் இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை 46,344 ஆக அதிகரித்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக எண்ணிக்கையை அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுவதுடன் மேலும் பல அமெரிக்க சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்கும் வகையில் இந்த வருடம் பல வேலைத்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக வொஷிங்டன் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...