tamilnig 11 scaled
இலங்கைசெய்திகள்

கனேடியராக வேடமிட்ட பாகிஸ்தான் உளவுப் பெண்

Share

கனேடியராக வேடமிட்ட பாகிஸ்தான் உளவுப் பெண்

கனேடியராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பழகிய பாகிஸ்தான் உளவுப் பெண் ஒருவருக்கு இந்திய இராணுவ ரகசியங்களை கூறிவந்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலுள்ள இந்திய தூதரகத்தில் பாதுகாவலராக பணியாற்றி வரும், சத்யேந்திர சிவால் (வயது 27) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர், கனடாவில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணுடன் இணையத்தளம் வாயிலாக பழகிவந்த நிலையிலேயே, இந்திய இராணுவம் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தொடர்பான இரகசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இந்தியா தொடர்பான இரகசிய தகவல்களை வழங்கினால் அதற்கு பதிலாக பெருந்தொகை பணத்தை தருவதாக அந்த பெண் கூற, சிலர் குறித்த இரகசியங்களை பகிர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவற்றை அறிந்த இந்திய பொலிஸார், தனது உறவினர் ஒருவரின் திருமணத்துக்காக இந்தியாவுக்கு வந்த சிவாலை லக்னோவில் வைத்து கைது செய்துள்ளனர்.

அதேவேளை, சிவாலை ஏமாற்றிய பெண் கனேடியர் அல்ல எனவும் அவர் பாகிஸ்தான் உளவு உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ அமைப்பைச் சேர்ந்தவர் எனவும் இந்திய பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share
தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...