tamilni 380 scaled
இலங்கைசெய்திகள்

ஏழு கடற்றொழிலாளர்களுக்கு மரண தண்டனை

Share

ஏழு கடற்றொழிலாளர்களுக்கு மரண தண்டனை

12 வருடங்களுக்கு முன் மீன்பிடி படகை கடத்தி மூன்று கடற்றொழிலாளர்களை கொன்ற வழக்கில் 7 கடற்றொழிலாளர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இன்று (24.12.2024) ஆதித்ய படபாண்டிகே இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த (15.10.2012) அன்று இலங்கைக் கடற்பகுதியில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டவர்களை ஏற்றிச் சென்ற ‘தேஜான்’ என்ற படகை கடத்தி மூன்று கடற்றொழிலாளர்கள் மற்றும் பல கடற்றொழிலாளர்களை குறித்த 7 கடற்றொழிலாளர்கள் கடுமையாகக் காயப்படுத்தியுள்ளனர்.

மேலும் படகை கடத்தி அவுஸ்திரேலியா அனுப்பிவைத்துள்ளனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 11 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

அவர்களில் மூவர் வழக்கு விசாரணையின் போது இறந்ததால், குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் நடத்தப்பட்டன.

இந்த வழக்கில் 10வது குற்றவாளியாக குறிப்பிடப்பட்டிருந்த சந்தேகநபரை விடுதலை செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்ட நிலையில் மீதமிருந்த ஏழு குற்றவாளிகளும் இந்த தண்டனையை விதித்துள்ளார்.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...