tamilni 321 scaled
இலங்கைசெய்திகள்

மின்சார சபை ஊழியர்களின் கடனுக்கு வட்டி செலுத்தும் வாடிக்கையாளர்கள்

Share

மின்சார சபை ஊழியர்களின் கடனுக்கு வட்டி செலுத்தும் வாடிக்கையாளர்கள்

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் கடன் வசதிகளுக்கான வட்டி, வாடிக்கையாளர்களின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் பணியாளர்கள் மற்றும் புதிதாக இணைத்துக் கொள்ளப்படுகின்றவர்களுக்கு அனர்த்த மற்றும் அவசர கடன்வசதியாக 12 ஆயிரம் கோடி ரூபாய் மின்சார சபையினால் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான வட்டித்தொகையில் மூன்றில் இரண்டு பகுதியை இலங்கை மின்சார சபையே செலுத்தி வருகிறது. எனினும் குறித்த தொகையை மின்பட்டியலின் வெவ்வேறு கட்டணப் பிரிவுகளின் கீழ் வாடிக்கையாளர்களிடம் இருந்து மின்சார சபை அறவிட்டுக்கொள்வதாக தற்போது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பான தகவல் வெளியில் கசிந்துள்ள நிலையில் பொதுமக்கள் பெரும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

அதனையடுத்து குறித்த கடன் தொகையையும், அதற்கான வட்டியையும் மீளப் பெறுவதற்கான பொறிமுறை ஒன்றை உடனடியாக செயற்படுத்துமாறு மின்சார சபையின் அதிகாரிகளுக்கு மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர பணிப்புரை விடுத்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...