tamilnih 81 scaled
இலங்கைசெய்திகள்

மதுபானங்களுக்கு வரியை குறைக்குமாறு கோரிக்கை

Share

மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்குமாறு மதுவரித் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கும் மதுவரித் திணைக்கள ஆணையாளர் ஜே.எம். குணசிறிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வரி அதிகரிப்பு காரணமாக மதுபான விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக மதுபான உற்பத்தி நிறுவன பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே வரியை குறைத்து நுகர்வோருக்கு நிவாரணங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆண்டுக்கான மதுவரி வருமானமாக 232 பில்லியன் ரூபாவை ஈட்ட முடியும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

உரிய முறையில் வரியை செலுத்துமாறும், போலி மதுபான உற்பத்திகளை தடுக்க ஸ்டிர்கர்களை போத்தலில் ஒட்டுமாறும் ஆணையாளர் நாயகம் கோரியுள்ளார்.

மதுவரி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட அனுமதிப்பத்திரங்களின் கட்டண அதிகரிப்பு குறித்த வர்த்தமானி அறிவித்தல் தவறுதலாக வெளியிடப்பட்டுள்ளது எனவும், ஜனாதிபதி நாடு திரும்பியதும் இந்த வர்த்தமானி அறிவித்தல் மீள பெற்றுக்கொள்ளப்படும் எனவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...