இலங்கை
கொழும்பில் 97 மரங்கள் முறிந்து விழும் அபாயம்
கொழும்பில் 97 மரங்கள் முறிந்து விழும் அபாயம்
பொரளை பிரதேசத்தில் அதிகளவான மரங்கள் முறிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, பொரளை பிரதேசத்தில் ஆபத்தில் உள்ள 97 மரங்கள் இனங்காணப்பட்டுள்ளன. கொழும்பு மாநகர சபையின் அதிகார வரம்பிற்குள் 329 ஆபத்தில் உள்ள மரங்கள் இனங்காணப்பட்டுள்ளன.
சமகாலத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரங்கள் முறிந்து விழும் அபாயம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
கொழும்பு நகரில் அபாய நிலையில் உள்ள 360 மரங்கள் தொடர்பில் பொதுமக்களும் பொலிஸாரும் கொழும்பு மாநகர சபைக்கு அறிவித்துள்ளனர்.
கொழும்பு நகரில் ஆபத்தான 214 மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களத்தின் நிபுணர்கள் குழு அண்மையில் கொழும்பு நகரில் அழிந்து வரும் மரங்களை ஆய்வு செய்ததுடன், 700 மரங்கள் பரிசோதிக்கப்பட்டன.
நாட்டின் எந்தவொரு நகரத்திலும் ஆபத்தான மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், குறிப்பிட்ட மரங்களை வெட்டுவதற்கான பரிந்துரைகளைப் பெறுவதில் சிக்கல்கள் இருப்பதாக மாகாண மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்தார்.