இலங்கைசெய்திகள்

அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

Share
rtjy 217 scaled
Share

அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் குறைந்தது 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்களில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கில், ‘மக்கள் போராட்ட இயக்கம்’ இந்த ஆர்ப்பாட்டத்தை நேற்றையதினம் (25.11.2023) ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது அமெரிக்க ஜனாதிபதியின்; புகைப்படத்தை ஒரு குழுவினர் எரிக்க முயன்றதால் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது நாரஹேன்பிட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக முதலில் போராட்டக்காரர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பின்னர், கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து ஆக்ரோஷமாக நடந்து கொண்ட இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...