rtjy 217 scaled
இலங்கைசெய்திகள்

அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

Share

அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் குறைந்தது 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்களில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கில், ‘மக்கள் போராட்ட இயக்கம்’ இந்த ஆர்ப்பாட்டத்தை நேற்றையதினம் (25.11.2023) ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது அமெரிக்க ஜனாதிபதியின்; புகைப்படத்தை ஒரு குழுவினர் எரிக்க முயன்றதால் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது நாரஹேன்பிட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக முதலில் போராட்டக்காரர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பின்னர், கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து ஆக்ரோஷமாக நடந்து கொண்ட இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
4JVJ5DK AFP 20251227 89488ZV v2 HighRes FilesYemenConflictProtestUaeSaudi jpg
செய்திகள்உலகம்

ஏமனிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்: சவுதி – அபுதாபி விரிசல் பின்னணியா?

ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டிருந்த தனது படைகளைத் திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம்...

image baba9371d9
செய்திகள்அரசியல்இலங்கை

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க மேலதிக அவகாசம்: ஜனவரி 31 வரை நீடிப்பு!

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை (Firearm Licenses) புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை மேலும் ஒரு மாதத்தினால் நீடிக்கப்...

Foreign Ministry
செய்திகள்இலங்கை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 3 ஆண்டு காலத் தவிப்பு: இலங்கைப் பெண்ணை மீட்க வெளிவிவகார அமைச்சு நேரடித் தலையீடு!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) தனது குழந்தையுடன் நாடு திரும்ப முடியாமல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகச்...

rain
செய்திகள்இலங்கை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் இன்று மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் பல மாகாணங்களில் இன்று (31) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...