rtjy 217 scaled
இலங்கைசெய்திகள்

அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

Share

அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் குறைந்தது 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்களில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கில், ‘மக்கள் போராட்ட இயக்கம்’ இந்த ஆர்ப்பாட்டத்தை நேற்றையதினம் (25.11.2023) ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது அமெரிக்க ஜனாதிபதியின்; புகைப்படத்தை ஒரு குழுவினர் எரிக்க முயன்றதால் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது நாரஹேன்பிட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக முதலில் போராட்டக்காரர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பின்னர், கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து ஆக்ரோஷமாக நடந்து கொண்ட இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 693b75dbdb13b
இலங்கைசெய்திகள்

காதலிக்கு ஸ்மார்ட் ஃபோன், மீதிப் பணத்தைச் சூதாட்டம்: அளுத்கமையில் கொள்ளையிட்ட இளைஞன் கைது!

அளுத்கமைப் பகுதியில் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக 18 வயதுடைய ஒருவர்...

the economic times tamil
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு: 24 கரட் பவுண் ரூ. 339,000!

நாட்டில் இன்றையதினம், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் 3,000...

images 7 4
உலகம்செய்திகள்

ChatGPT தூண்டுதலால் தாயைக் கொன்ற மகன்: Open AI மீது குடும்பத்தினர் வழக்கு!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தைச் சேர்ந்த சோல்பெர்க் (Saulberg) என்பவர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி தனது...

25 693bfb6f9f0d2
உலகம்செய்திகள்

திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரிக்கின்றன: ஐ.நா.வின் கடுமையான எச்சரிக்கை!

உலகம் முழுவதும் திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) நேற்று...