இலங்கைசெய்திகள்

ஜெய் ஷாவிடம் மன்னிப்பு கோரிய இலங்கை அரசு

tamilni 287 scaled
Share

ஜெய் ஷாவிடம் மன்னிப்பு கோரிய இலங்கை அரசு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்காவின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக, ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளருமான ஜெய் ஷாவிடம், இலங்கை அரசு முறைப்படி மன்னிப்பு கோரியுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் சீரழிவுக்கு ஜெய் ஷாவை குற்றம் சாட்டிய ரணதுங்கவின் கருத்துக்கள், அவரிடம் இந்த மன்னிப்பை கோர வைத்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

“இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கும் ஜெய் ஷாவுக்கும் இடையே உள்ள தொடர்பின் காரணமாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, இலங்கை கிரிக்கெட்டை மிதித்து கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணத்தில் உள்ளது. ஜெய் ஷாவே இலங்கை கிரிக்கெட்டை நடத்தி வருகிறார்.

இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருக்கும் அவரது தந்தையால்தான் அவர் அதிகாரம் பெற்றவராக இருக்கிறார்.” என்று ரணதுங்க குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இந்த கருத்துக்களுக்காக, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் காஞ்சன விஜேசேகர ஆகியோர் மன்னிப்பு கோரியிருந்தனர்.

மேலும், கிரிக்கெட் விவகாரங்களுக்கான பொறுப்பு வெளிப்புற தாக்கங்களை விட இலங்கை நிர்வாகிகளிடமே உள்ளது என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...