rtjy 130 scaled
இலங்கைசெய்திகள்

பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட விடுமுறை!

Share

பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட விடுமுறை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை வழங்கப்பட்டுள்ள விசேட விடுமுறைக்கு பதிலாக 18ஆம் திகதி பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள இந்து மக்கள் நாளையதினம்(12) தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில், நாளையதினம் ஞாயிற்றுக் கிழமை என்ற காரணத்தினால் எதிரவ்ரும் திங்கட்கிழமை 13ஆம் திகதி நாட்டில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவிக்கையில்,

தீபாவளியை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை முஸ்லிம் பாடசாலைகள் தவிர்ந்த நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான மாற்றீடாக எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...