இலங்கைசெய்திகள்

காரும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து

Share
rtjy 41 scaled
Share

காரும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து

களுத்துறையில் லொறியொன்றும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் அரச உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை – மொரகஹஹேன, ஹொரகஸ் சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், விபத்தில் உயிரிழந்தவர் நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முகாமைத்துவ உதவியாளர் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்த அதிகாரி கல்பத்த பயகம பகுதியைச் சேர்ந்த சந்துன் ஜயசிங்க என்ற 39 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் நிறுவன ரீதியான நிகழ்வொன்றில் கலந்துகொண்டு வீடு திருப்பியபோதே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...