tamilni 376 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி

Share

நாட்டின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி

29 அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

குறித்த பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய மேலும் சில அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட உள்ளன.

அவ்வகையில், மஹவ, மாத்தறை, ஹிக்கடுவ, அம்பலாங்கொட, சிதாவக, சிதாவகபுர, பாணந்துறை, ஹொரண, வத்தளை, ஜா-எல, கம்பஹா, கட்டான அபிவிருத்தித் திட்டங்கள்.

மற்றும், மஹர, கெக்கிராவ, தலாவ, மாவனல்லை, குண்டசாலை, நாவலப்பிட்டி, கம்பளை, ஹட்டன், வெலிமடை, பண்டாரவளை, வெல்லவாய அம்பாறை அபிவிருத்தித் திட்டங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட உள்ளன.

திருகோணமலை அபிவிருத்தித் திட்டம் எல்ல அபிவிருத்தித் திட்டம், ஹம்பாந்தோட்டை அபிவிருத்தித் திட்டம் மற்றும் ஹிக்கடுவ அபிவிருத்தித் திட்டம் என்பன வர்த்தமானியில் வெளியிடப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவற்றில் எல்ல அபிவிருத்தித் திட்டம் தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...