இந்தியாஇலங்கைசெய்திகள்

நரேந்திர மோடியின் நல்லூர் கோவிலுக்கான விஜயம் தொடர்பில் தகவல்

Share
tamilni 341 scaled
Share

நரேந்திர மோடியின் நல்லூர் கோவிலுக்கான விஜயம் தொடர்பில் தகவல்

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான பயணம் குறித்து இதுவரை வெளிவராத தகவல்களை இந்தியாவின் முன்னாள் துணை தூதர் நடராஜன் வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்ட போது புகழ்பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ளவில்லை.

இதற்கான காரணம் என்ன என்பதை நடராஜன் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்தபோது நல்லூர் கோவில், மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், காங்கேசன்துறை நகுலேஸ்வரன் கோவிலுக்கு,அவரை அழைத்து செல்ல திட்டமிடப்பட்டது.

இது தொடர்பாக நல்லூர் கோவில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி குமாரதாச மாப்பன முதலியாருடன் ஆலோசனையும் நடத்தப்பட்டது.

அப்போது, கோவிலுக்குள் மேலாடை அணியாமல்தான் செல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரமே கோவில் நடை திறக்கப்படும் என்ற மரபுகளில் மாற்றம் எதுவும் செய்ய முடியாது என நல்லூர் தேவஸ்தான அதிகாரி திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதனால் நல்லூர் முருகன் கோவிலுக்கு பிரதமர் மோடியால் செல்ல முடியவில்லை. எனினும் காங்கேசன்துறை நகுலேஸ்வரன் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.

அப்போது அங்கு 98 வயதான நகுலேஸ் குருக்கள் உடனிருந்தார். தற்போது அவர் காலமாகிவிட்டார் என்று ஏ.நடராஜன் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதராக ஏ.நடராஜன், 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை பணியாற்றினார்.

இந்தநிலையில் அவர், ‘From the Village to the Global Stage’ என்ற தலைப்பில் புதிய நூல் ஒன்றை எழுதி உள்ளார்.

இந்த நூல் விரைவில் கோவையில் வெளியிடப்படவுள்ளது.

இந்த நூலில் பிரதமர் மோடியின் யாழ்ப்பாண பயணம் தொடர்பான பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...