tamilni 341 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

நரேந்திர மோடியின் நல்லூர் கோவிலுக்கான விஜயம் தொடர்பில் தகவல்

Share

நரேந்திர மோடியின் நல்லூர் கோவிலுக்கான விஜயம் தொடர்பில் தகவல்

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான பயணம் குறித்து இதுவரை வெளிவராத தகவல்களை இந்தியாவின் முன்னாள் துணை தூதர் நடராஜன் வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்ட போது புகழ்பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ளவில்லை.

இதற்கான காரணம் என்ன என்பதை நடராஜன் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்தபோது நல்லூர் கோவில், மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், காங்கேசன்துறை நகுலேஸ்வரன் கோவிலுக்கு,அவரை அழைத்து செல்ல திட்டமிடப்பட்டது.

இது தொடர்பாக நல்லூர் கோவில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி குமாரதாச மாப்பன முதலியாருடன் ஆலோசனையும் நடத்தப்பட்டது.

அப்போது, கோவிலுக்குள் மேலாடை அணியாமல்தான் செல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரமே கோவில் நடை திறக்கப்படும் என்ற மரபுகளில் மாற்றம் எதுவும் செய்ய முடியாது என நல்லூர் தேவஸ்தான அதிகாரி திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதனால் நல்லூர் முருகன் கோவிலுக்கு பிரதமர் மோடியால் செல்ல முடியவில்லை. எனினும் காங்கேசன்துறை நகுலேஸ்வரன் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.

அப்போது அங்கு 98 வயதான நகுலேஸ் குருக்கள் உடனிருந்தார். தற்போது அவர் காலமாகிவிட்டார் என்று ஏ.நடராஜன் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதராக ஏ.நடராஜன், 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை பணியாற்றினார்.

இந்தநிலையில் அவர், ‘From the Village to the Global Stage’ என்ற தலைப்பில் புதிய நூல் ஒன்றை எழுதி உள்ளார்.

இந்த நூல் விரைவில் கோவையில் வெளியிடப்படவுள்ளது.

இந்த நூலில் பிரதமர் மோடியின் யாழ்ப்பாண பயணம் தொடர்பான பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

Share
தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...