tamilni 320 scaled
இலங்கைசெய்திகள்

பாலியல் சம்பவங்கள்! இராஜாங்க அமைச்சர் அதிர்ச்சி தகவல்

Share

பாலியல் சம்பவங்கள்! இராஜாங்க அமைச்சர் அதிர்ச்சி தகவல்

நாட்டில் பதிவாகியுள்ள சிறுவர் வன்புணர்வு சம்பவங்களில், பாதியளவான சம்பங்கள், போதைப்பொருள் பாவனையாளர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

செப்டெம்பரில் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மீதான 168 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவர்களில் 22 பேர் கர்ப்பமடைந்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ன முன்னதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அவர்களில் பதினைந்து பேர் அதே வயதுடையவர்களுடன் உடலுறவு கொண்டதால் கர்ப்பமாகியுள்ளனர் என்றும் ஏழு பேர் பலாத்காரம் காரணமாக கர்ப்பமாகியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும், முறையான தந்தைமார் இல்லாத 22 குழந்தைகள் இந்த உலகத்திற்கு வாழ்வதில் பாரிய சிக்கல் நிலை உள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் போதைக்கு அடிமையானவர்களால் மேற்கொள்ளப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் குடும்ப வன்முறை ஆகியவற்றிற்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...