tamilni 303 scaled
இலங்கைசெய்திகள்

சுற்றுலா விடுதியொன்றில் பொலிஸாரிடம் சிக்கிய இளம் ஜோடிகள்

Share

சுற்றுலா விடுதியொன்றில் பொலிஸாரிடம் சிக்கிய இளம் ஜோடிகள்

வத்தளை – ஹுனுபிட்டிய பிரதேசத்தில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் ஐஸ் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட நான்கு இளம் ஜோடிகளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மேலும், குறித்த சந்தேகநபர்களுக்கு விடுதியறையை வழங்கிய முகாமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஜா-ஏல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 3500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கலால் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த விடுதி சோதனை செய்யப்பட்டதாகவும், இதன்போதே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20-30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், யுவதிகள் அனுராதபுரம், களனி, வத்தளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களுடன் இருந்த இளைஞர்கள் கஸ்பேவ, தம்புள்ளை, எம்பிலிப்பிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த இளம் ஜோடிகள் முகப்புத்தகம் மூலம் ஒருவரையொருவர் தொடர்பை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை அனைவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என ஜா- எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 157
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கரடி பொம்மைக்குள் ‘ஐஸ்’ போதைப்பொருள் கடத்தல்: காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் விளக்கமறியலில்!

கொரியர் சேவை ஊடாக கரடி பொம்மைக்குள் மறைத்து ‘ஐஸ்’ போதைப்பொருளைக் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட...

world 156
செய்திகள்இலங்கை

ஆசியக் கிண்ணத் தொடருக்கு இலங்கை ஹாக்கி அணி தகுதி: வெள்ளிப் பதக்கத்துடன் வீரர்கள் தாயகம் திரும்பினர்!

தாய்லாந்தில் நடைபெற்ற 8-வது ஆசியக் கிண்ணத் தகுதிகாண் ஹாக்கி போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்த இலங்கை...

world 155
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தளத்தில் கடும் மழை: மின்னல் தாக்கித் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது!

புத்தளம், கடையாகுளம் பகுதியில் திங்கட்கிழமை (13) இரவு ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாகத் தென்னை மரம்...

world 154
செய்திகள்உலகம்

திருத்தந்தை பதினான்காம் லியோ ஆப்பிரிக்கா வருகை: அல்ஜீரியாவில் உற்சாக வரவேற்பு!

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், ஆப்பிரிக்க நாடுகளுக்கான தனது வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தூதுப் பயணத்தை நேற்று...