tamilni 184 scaled
இலங்கைசெய்திகள்

காசா-இஸ்ரேல் போரால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

Share

காசா-இஸ்ரேல் போரால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

காசா – இஸ்ரேலுக்கு இடையில் அதிகரித்துள்ள யுத்த சூழ்நிலையின் விளைவாக உலக சந்தையில் எரிபொருள் விநியோகத்தில் நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது.

இந்நிலையில் நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் இருப்புக்களை பாதுகாப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இந்த விடயம் தொடர்பான பணிப்புரைகளை அண்மையில் வழங்கியுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CEYPETCO) தகவல் வெளியிட்டுள்ளது.

எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் தற்போது எவ்வித பிரச்சினைகளும் எழவில்லை என்றாலும், எதிர்வரும் காலங்களில் ஏதேனும் நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் அதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு அரசாங்கம் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

இந்நிலையில் சினோபெக் இலங்கையிலும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருவதால், எதிர்காலத்தில் எரிபொருள் விநியோகத்தை எந்தவித நெருக்கடியும் இன்றி பராமரிக்க முடியும் என CEYPETCO மேலும் வலியுறுத்தியுள்ளது.

இருந்தபோதிலும், தற்போதைய உலகளாவிய சூழ்நிலையின் தாக்கத்தினால் ஏதேனும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டால், அதற்குரிய எரிபொருள் மேலாண்மை முறைகள் அறிவிக்கப்படும் என்று CEYPETCO தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் மற்றும் CEYPETCO நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புகளை இரண்டு மாதங்களுக்கு பிறகு எவ்வாறு பாதுகாப்பது என்ற நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளன.

மீண்டும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால், முந்தைய QR குறியீட்டு முறை மீண்டும் தொடங்கப்படுமா அல்லது மற்றொரு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை தீர்மானிப்பதில் இந்த விவாதங்கள் கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...