rtjy 126 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை நிறுத்திய மருந்து தொடர்பில் இந்திய நிறுவனம் கருத்து

Share

இலங்கை நிறுத்திய மருந்து தொடர்பில் இந்திய நிறுவனம் கருத்து

இலங்கையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இம்யூனோகுளோபுலின் மருந்துகளுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இந்திய மஹாராஸ்டிரா சேர்ந்த இந்திய நிறுவனம், இலங்கையின் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

இலங்கை இறக்குமதியாளர், அத்துடன் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட துறைமுகம் மற்றும் இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட துறைமுகம் பற்றிய விபரங்களைக் கேட்டு இந்த இந்திய நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.

அத்துடன் இந்தியாவின் மத்திய, மாநில மற்றும் பிராந்தி உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மற்றும் இந்திய சுங்கம் ஆகியவற்றில் அதிகாரப்பூர்வமாக முறையிடப்படும் என்றும் இந்திய நிறுவனம் அறிவித்துள்ளது.

உண்மையான ஏற்றுமதியாளர்களின் நற்பெயரைக் காப்பாற்ற இதுபோன்ற வேண்டுமென்றே மோசடி நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதிசெய்யவேண்டும் என்று குறித்த இந்திய நிறுவனம் கேட்டுள்ளது.

அத்துடன் இந்த இந்த தயாரிப்புகளை தாங்கள் இதுவரை எந்த தரப்பினருக்காகவும் உற்பத்தி செய்யவில்லை அல்லது ஏற்றுமதி செய்யவில்லை என்றும் இந்திய நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த இம்யூனோகுளோபுலினை யார் கொள்வனவு செய்தார்கள் என்பதைக் கண்டறிய இன்னும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை என்று மருத்துவ சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...