rtjy 32 scaled
இலங்கைசெய்திகள்

ஐ.நா பொதுச் சபை கூட்டத்தை புறக்கணித்த சஜித்

Share

ஐ.நா பொதுச் சபை கூட்டத்தை புறக்கணித்த சஜித்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நிகழ்வில் கலந்து கொள்ளவிடாமல் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தடுத்துவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.

நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் தான் மூன்றாவது தடவையாக பங்குபற்றியதாகக் கூறியதாகவும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஸ், டபிள்யூ.எச்.எம். தர்மசேன மற்றும் கின்ஸ் நெல்சன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தார்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அரசாங்க தரப்பில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிறுபான்மை கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் அழைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

” முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் காலங்களுக்குள், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை நிகழ்வில் தாம் மூன்று தடவைகள் கலந்துகொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் சர்வதேச நிகழ்வுகளை அறிந்து கொள்ள வேண்டும்.

இந்தநிலையில் உலக வங்கி பிரதிநிதிகள் மற்றும் சமந்தா பவர் ஆகியோருடன் சந்திப்புகளில் அமர்வதற்கு தங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

எனினும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியது போல் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதற்காக தினசரி கொடுப்பனவு பயண கொடுப்பனவு எதையும் பெறவில்லை” என தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...