tamilni 50 scaled
இலங்கைசெய்திகள்

சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பில் சிக்கல்

Share

சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பில் சிக்கல்

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 330 மில்லியன் டொலர் பிணை எடுப்பு கடன் பீய்ஜிங்கின் மறுசீரமைப்பு மறுப்பு காரணமாக நிச்சயமற்றதாகியுள்ளது.

புதுடெல்லியில் இருந்து வெளியாகியுள்ள அறிக்கை ஒன்று இதனை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் மிகப் பெரிய இருதரப்பு கடன் வழங்குனர்களான சீனா, ஜப்பான் மற்றும் இந்தியாவிடமிருந்து, சாத்தியமான நிதியுதவிக்கு முன்னர், அந்த நாடுகள் தங்கள் கடன்களை மறுசீரமைப்பதாக உறுதியளிக்க வேண்டியதன் அவசியத்தை சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் பல்வேறு கோரிக்கைகள் இருந்தபோதிலும், பீய்ஜிங் கடன் நிவாரண கட்டமைப்பை வழங்கவில்லை என அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த மறுப்பு இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்புத் திட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இந்தநிலையில் மொராக்கோவில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி கூட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில், இந்த மாதம் இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இலங்கை கடன் குறைப்பு உடன்படிக்கையை எட்ட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சீனா இந்த குழுவில் இன்னும் சேரவில்லை. ஒரு பார்வையாளராக இருந்து வருகிறது.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...