tamilni 39 scaled
இலங்கைசெய்திகள்

ஆகஸ்டில் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள பணம்

Share

ஆகஸ்டில் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள பணம்

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஆகஸ்டில் தொழிலாளர்கள் அனுப்பும் பணம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2023 ஆகஸ்டில் இலங்கையின் வெளித்துறைச் செயற்பாட்டின்படி, ஜூலை 2023இல் பதிவு செய்யப்பட்ட 541 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், ஆகஸ்ட் மாதத்தில் தொழிலாளர்கள் அனுப்பும் பணம் 499 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

எவ்வாறாயினும், கடந்த ஆண்டு ஒகஸ்டில் பதிவான 325 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாத புள்ளிவிவரங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன. ஜூன் 2023இல் தொழிலாளர்கள் அனுப்பிய தொகையில் மொத்தம் 476 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மே 2023 இல் 480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் ஏப்ரல் மாதத்தில் 454 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2023ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இலங்கை வெளிநாட்டு ஊழியர்களின் பணம் ஜனவரியில் 437.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், பெப்ரவரியில் 407.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், மார்ச் 2023 இல் 568.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், ஆகஸ்ட் 2023 இல் வெளிநாட்டு வேலைக்கான மொத்தப் புறப்பாடுகள் 26,131 ஆகவும், 2022 இல் பதிவுசெய்யப்பட்ட 311,056 உடன் ஒப்பிடுகையில் 2023 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 197,146 ஆகவும் இருந்தது.

Share
தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...