rtjy 185 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

Share

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

போதைப்பொருள் கடத்தல், இலஞ்சம் மற்றும் ஊழல், வர்த்தக அடிப்படையிலான உட்பாய்ச்சல்கள் என்பன உள்ளடங்கலாக சுங்கத்துடன் தொடர்புடைய பல குற்றங்கள் பணம் தூயதாக்கலுக்குப் பங்களிப்புச்செய்வதாக அடையாளங்காணப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார்துறை பங்குதாரர்களுடன் இணைந்து இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் உளவறிதல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் 2021/2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதியளித்தல் என்பன தொடர்பில் காணப்பட்ட இடநேர்வு குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதியளித்தல் என்பவற்றுக்கான சாத்தியப்பாடு நடுத்தர அளவில் இதில் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இடநேர்வு அறிக்கையானது இலங்கையில் பதிவான பணம் தூயதாக்கல் முறைமைகள், பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதியளித்தல், இவ்வாறான செயற்பாடுகளால் ஏற்படும் பாதிப்புக்கள், இத்தகைய செயற்பாடுகளுக்கான இடர்நேர்வுகள் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது.

இம்மதிப்பீட்டின் பிரகாரம் போதைப்பொருள் கடத்தல், இலஞ்சம் மற்றும் ஊழல், வர்த்தக அடிப்படையிலான உட்பாய்ச்சல்கள் என்பன உள்ளடங்கலாக சுங்கத்துடன் தொடர்புடைய பல குற்றங்கள் பணம் தூயதாக்கலுக்குப் பங்களிப்புச்செய்வதாக அடையாளங்காணப்பட்டுள்ளது.

அவற்றுக்கு மேலதிகமாக மோசடிகள், கொள்கை, சூழல் மற்றும் இயற்கை வளங்கள் சார்ந்த குற்றங்கள், ஆட்கடத்தல், வரிக்குற்றங்கள், சட்டவிரோத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத கடற்றொழில் என்பனவும் பணம் தூயதாக்கலுடன் தொடர்புபட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் இம்மதிப்பீட்டை அடிப்படையாகக்கொண்டு, நாட்டில் பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுக்க நிதியளித்தல் ஆகியவற்றுக்கு எதிரான தேசிய கொள்கை உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இவ்வாறான நடவடிக்கைகளை முறியடிப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...