tamilni 343 scaled
இலங்கைசெய்திகள்

சனல் 4 ஆவணப்படம் தொடர்பில் பரபரப்பு தகவல்

Share

சனல் 4 ஆவணப்படம் தொடர்பில் பரபரப்பு தகவல்

இலங்கையில் நடைபெற்ற 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரிட்டிஷ் தொலைக்காட்சி வலையமைப்பான சனல் 4இன் ஆவணப்பட தயாரிப்பாளர்கள், தமது தயாரிப்பில் நம்பகமான ஆதாரங்கள் இல்லை என்பதை ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொழும்பு ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதல்களுக்கு, அரச அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த, ‘விசில்ப்ளோயர்’ என்ற தகவலளாலரான அசாத் மௌலானாவின் கூற்றுகளை ஆதரிக்க நம்பகமான ஆதாரங்கள் இல்லை என்று அவர்கள் ஒப்புக்கொண்டதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

ஆவணப்படத்தின் இயக்குனர் தோம் வோக்கர் மற்றும் தயாரிப்பாளர் பென் டி பியர் ஆகியோர், ஜெனீவாவில் பங்கேற்ற நிகழ்வு ஒன்றின் போது இந்த விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

சனல் 4 ஆவணப்படத்தின் படி, வெளிநாட்டில் தஞ்சம் கோரிய அசாத் மௌலானா, 2018இல் புத்தளத்தில் தற்கொலை குண்டுதாரிகளுக்கும், இலங்கையின் உயர்மட்ட புலனாய்வு அதிகாரி ஒருவருக்கும் இடையே நடந்த சந்திப்பை நேரில் பார்த்துள்ளார்.

இருப்பினும், சஹ்ரான் ஹாசிம் மற்றும் சுரேஷ் சாலே ஆகியோருக்கு இடையேயான சந்திப்புக்கான எந்த ஆதாரமும் தன்னிடம் இல்லை என்று, ஆவணப்பட தயாரிப்பு நிறுவனமான பேஸ்மென்ட் பிலிம்ஸின் நிறுவனர் தோம் வோக்கர், கூறியுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...