tamilni 202 scaled
இலங்கைசெய்திகள்

தேசிய அடையாள அட்டை தொடர்பில் தகவல்

Share

2022 ஆம் ஆண்டுக்கான ஆட்பதிவு திணைக்களத்தினால் அச்சிடப்பட்ட தேசிய அடையாள அட்டைகளில் 04 வீதமானவை பழுதடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில், ஆட்பதிவு திணைக்களம் 6,28,973 தேசிய அடையாள அட்டைகளை அச்சிட்டுள்ளது.

இவற்றில், 22,407 பழுதடைந்துள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தவறான அடையாள அட்டைகள் PVC மற்றும் பாலிகார்பனேட் அட்டைகளில் அச்சிடப்பட்டுள்ளன. இந்த இரண்டு வகையான அட்டைகள் மூலம் அச்சிடப்பட்ட குறைபாடுள்ள அடையாள அட்டைகளின் எண்ணிக்கையை தனித்தனியாக வழங்க திணைக்களம் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக, பழுதடைந்த அடையாள அட்டைகள் தொடர்பான எண்ணிக்கையை கணக்கிடுவதற்கான தகவல்கள் தணிக்கைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என தணிக்கை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
articles2FVIVe6pP2puuipbGIu7f9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலால் பரவிய பதற்றம் – தேடுதல் வேட்டை!

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட...

lXCde1e0G7ygeggbmYlO4CSM1NM
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு ஜாக்பாட்: ஒரே நாளில் 62 மில்லியன் ரூபாய் வருமானம்!

நத்தார் பண்டிகை மற்றும் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை விடுமுறைக்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி...

MediaFile 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லை நீடிப்பு!

‘டித்வா’ (Titli) புயல் மற்றும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியதாரர்கள்...

Nalinda Jayathissa
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளை மீறினால் அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், அவற்றை மீளப்பெறும் அதிகாரம் பாடத்திற்கு பொறுப்பான...