tamilni 202 scaled
இலங்கைசெய்திகள்

தேசிய அடையாள அட்டை தொடர்பில் தகவல்

Share

2022 ஆம் ஆண்டுக்கான ஆட்பதிவு திணைக்களத்தினால் அச்சிடப்பட்ட தேசிய அடையாள அட்டைகளில் 04 வீதமானவை பழுதடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில், ஆட்பதிவு திணைக்களம் 6,28,973 தேசிய அடையாள அட்டைகளை அச்சிட்டுள்ளது.

இவற்றில், 22,407 பழுதடைந்துள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தவறான அடையாள அட்டைகள் PVC மற்றும் பாலிகார்பனேட் அட்டைகளில் அச்சிடப்பட்டுள்ளன. இந்த இரண்டு வகையான அட்டைகள் மூலம் அச்சிடப்பட்ட குறைபாடுள்ள அடையாள அட்டைகளின் எண்ணிக்கையை தனித்தனியாக வழங்க திணைக்களம் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக, பழுதடைந்த அடையாள அட்டைகள் தொடர்பான எண்ணிக்கையை கணக்கிடுவதற்கான தகவல்கள் தணிக்கைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என தணிக்கை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 693b75dbdb13b
இலங்கைசெய்திகள்

காதலிக்கு ஸ்மார்ட் ஃபோன், மீதிப் பணத்தைச் சூதாட்டம்: அளுத்கமையில் கொள்ளையிட்ட இளைஞன் கைது!

அளுத்கமைப் பகுதியில் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக 18 வயதுடைய ஒருவர்...

the economic times tamil
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு: 24 கரட் பவுண் ரூ. 339,000!

நாட்டில் இன்றையதினம், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் 3,000...

images 7 4
உலகம்செய்திகள்

ChatGPT தூண்டுதலால் தாயைக் கொன்ற மகன்: Open AI மீது குடும்பத்தினர் வழக்கு!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தைச் சேர்ந்த சோல்பெர்க் (Saulberg) என்பவர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி தனது...

25 693bfb6f9f0d2
உலகம்செய்திகள்

திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரிக்கின்றன: ஐ.நா.வின் கடுமையான எச்சரிக்கை!

உலகம் முழுவதும் திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) நேற்று...