rtjy 182 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை எதிர்நோக்குவது கடன் பொறி அல்ல

Share

இலங்கை எதிர்நோக்குவது கடன் பொறி அல்ல

இலங்கையும் பிராந்தியமும் இன்று எதிர்நோக்குவது ‘கடன் பொறி’ அல்ல மாறாக ‘அபிவிருத்தியற்ற பொறி’ என சீனத் தூதுவர் குய் தெரிவித்தார்.

மேலும் இலங்கை எப்போதும் சீனாவின் நண்பராக இருந்து வருகிறது மற்றும் சீனாவின் முக்கிய நலன்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் சீனாவுக்கு ஆதரவாக நிற்கிறது என அவர் குறிப்பிட்டார்.

எனினும் இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் சீனா இன்னும் முழுமையாக ஈடுபாட்டை காட்டவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையுடன் ‘கடன் இராஜதந்திரம்’ என்று அழைக்கப்படும் குற்றச்சாட்டை மறுப்பதற்கு ஒவ்வொரு வாய்ப்பையும் அது பயன்படுத்திக்கொள்கிறது.

கடந்த செவ்வாயன்று, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் புவிசார் அரசியல் உயர்மட்ட குழு கலந்துரையாடல் ஒன்று, கொழும்பில் உள்ள சில உயர்மட்ட இராஜதந்திரிகள் மத்தியில் நடத்தப்பட்டது.

இதில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, சீனத் தூதுவர் கி ஜென்ஹாங், பிரான்ஸ் தூதுவர் ஜீன்-பிரான்கோயிஸ் பெக்டெட் மற்றும் ஜப்பானியத் தூதுவர் ஹிடேக்கி மிசுகோஸி ஆகியோர் பங்கேற்றனர்.

இதன்போது இலங்கையும் பிராந்தியமும் இன்று எதிர்நோக்குவது ‘கடன் பொறி’ அல்ல, மாறாக ‘அபிவிருத்தியற்ற பொறி’ என்பதை சீனத் தூதுவர் குய் ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தினார்.

சீனா எப்போதுமே இலங்கையின் மூலோபாய மற்றும் நம்பகமான பங்காளியாக இருந்து வருகிறது. மேலும் இலங்கை எப்போதும் சீனாவின் நண்பராக இருந்து வருகிறது மற்றும் சீனாவின் முக்கிய நலன்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் சீனாவுக்கு ஆதரவாக நிற்கிறது.

இலங்கையின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் தேசிய கௌரவத்தைப் பாதுகாப்பதில் சீனாவும் உறுதியாக ஆதரவளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

சீனத் தூதருக்கு அடுத்தபடியாக அமர்ந்திருந்த இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரை இந்தியா ஒரு ‘வல்லமையம்’ என்று வலியுறுத்தினார்.

இந்தியாவின் இந்த விரைவான வளர்ச்சி மற்றும் மாற்றம் தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் ஏற்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்தியா மற்றும் அதன் தலைமையின் தற்போதைய முயற்சியை பொறுத்தவரை, பிராந்தியத்தின் பங்கை மீண்டும் நிலைநாட்டுவது மற்றும் பிற ஒத்த எண்ணம் கொண்ட பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவது என்பதாகும் என்று பாக்லே தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...