tamilni 184 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரிப்பு

Share

நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரிப்பு

இலஞ்சம் மற்றும் ஊழல் என்பது இப்போது நாட்டில் குற்றவியல் வருமானத்தை உருவாக்கும் இரண்டாவது மிக முக்கியமான சட்டவிரோத நடவடிக்கையாக மாறியுள்ளது.

இந்த செயற்பாடு, 2014 இல் ஐந்தாவது இடத்தில் இருந்த நிலையில் தற்போது மூன்று இடங்களால் முன்னோக்கி வந்துள்ளதாக மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வாரம் வெளியிடப்பட்ட தேசிய பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு அபாய மதிப்பீட்டு அறிக்கையில் நிதிப் புலனாய்வுப் பிரிவு இதனை வெளிப்படுத்தியுள்ளது.

அதிகமான சம்பவங்கள் முறைப்பாடுகளாக பதிவாகியிருந்தாலும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மற்றும் விசாரணைகள் மூலம் குறைவான எண்ணிக்கையிலான வழக்குகளே பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குற்றவியல் வருமானத்தை உருவாக்கும் முதல் சட்டவிரோத செயற்பாடுகளாக போதைப்பொருள் மற்றும் சுங்கம் தொடர்பான குற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...