tamilni 22 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாடு செல்ல முயற்சித்த யாழ் இளைஞர் கைது

Share

வெளிநாடு செல்ல முயற்சித்த யாழ் இளைஞர் கைது

போலியான ஆவணங்களை பயன்படுத்தி மலேசிய அதிகாரிகளை ஏமாற்றி மோசடியான முறையில் பெற்றுக்கொண்ட கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜோர்தான் செல்ல முயற்சித்த யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த இளைஞர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

குடி வரவு குடி அகழ்வு பிரிவினரால் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 22 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

எயார் அரேபியா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான ஜி 9501 என்ற விமானத்தின் ஊடாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வழியாக ஜோர்டான் நோக்கி பயணம் செய்ய முயற்சித்தபோது காட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர்.

இந்த இளைஞர் சமர்ப்பித்த கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் தொடர்பில் எழுந்த சந்தேகத்தை அடுத்து அது குறித்து விசாரணை செய்தபோது இவை போலி ஆவணங்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...