rtjy 32 scaled
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய ஆபத்தான நபர்

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய ஆபத்தான நபர்

கொழும்பின் புறநகர் பகுதியான பத்தரமுல்லயில் வட்டிக்கு பணம் கொடுத்த நபரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக அதுருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

22 வயதான சந்தேகநபர் அதுருகிரிய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இலங்கையிலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணிப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக சிங்கப்பூர் விமான நிலைய அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சந்தேகநபர்களை திருப்பி அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 25ஆம் திகதி கடன் கொடுத்த ஜானக புஸ்பகுமார வட்டிப் பணத்தை பெற்றுக் கொள்வதற்காக முச்சக்கரவண்டியில் சென்று விட்டு கொரவ பிரதேசத்தில் உள்ள தாய் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அங்கு பலத்த காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் டுபாயில் பதுங்கியிருக்கும் ஒரு குற்றவாளியான பன்ட்டியின் உறவினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் தகவலுக்கமைய, போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகராறு காரணமாக பன்ட்டியுடன் இருந்து விலகிய கட்டா என்பவர் பன்ட்டிக்கு அதிர்ச்சி கொடுப்பதற்கு இந்த கொலையை செய்துள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

கொலைக்கு மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையின் போது, ​​துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்த எந்தத் தகவலும் அவருக்குத் தெரியவில்லை எனவும், அவர் பத்தரமுல்ல பிரதேசத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஏறியதாகவும் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றதாகவும் சந்தேக நபர் கூறியதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தேக நபர் இரண்டு இரட்டை சகோதரர்களில் ஒருவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளுக்காக அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதுருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...