rtjy 3 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

அடுத்த தேர்தலில் பொதுஜன பெரமுன தோற்கும்

Share

அடுத்த தேர்தலில் பொதுஜன பெரமுன தோற்கும்

2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்ட நிலையே அடுத்த தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு ஏற்படும் என 43ஆம் படையணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, “இலங்கையில் சம்பிரதாய கட்சிகளுக்கு மக்கள் எழுச்சியுடன் முடிவு கட்டப்பட்டுள்ளது. அக்கட்சிகளின் உறுப்பினர்கள் என்னதான் நினைத்தாலும் மக்கள் ஆணை இனி கிடைக்கப்போவதில்லை.

2022 ஜூலை 9ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச மட்டுமல்ல சம்பிரதாய கட்சிகளும் அரசியல் ரீதியில் தோற்கடிக்கப்பட்டன. எதிர்க்கட்சியும் தமது பொறுப்பை நிறைவேற்றவில்லை.

இதனால்தான் மக்கள் தாமாகவே வீதிக்கு இறங்கி ஆட்சியாளர்களை விரட்டியடித்தனர் மற்றும் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் மொட்டுக் கட்சி இன்னும் அறிவிப்பு விடுக்கவில்லை.

2020 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்ட நிலையே அடுத்த தேர்தலில் மொட்டு கட்சிக்கு ஏற்படும்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...