இலங்கைக்கு சீனா உதவுவதாக உறுதி
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு சீனா உதவுவதாக உறுதி

Share

இலங்கைக்கு சீனா உதவுவதாக உறுதி

நிதிக் கடனின் சவால்களைத் திறம்பட எதிர்கொள்ள இலங்கைக்கு சீனா உதவும் என்று சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் வெளியுறவு ஆணைக்குழு அலுவலகத்தின் பணிப்பாளர் வாங் யீ (Wang Yi) உறுதியளித்துள்ளார்.

தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள குன்மிங்கில் நடைபெறும் ஏழாவது சீன-தெற்காசிய எக்ஸ்போ கண்காட்சியில், இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தபோது, வாங் இந்த உறுதியை அளித்துள்ளார் என கூறப்படுகின்றது.

சீனா எப்போதும் இலங்கையின் நம்பகமான மூலோபாய பங்காளியாக உள்ளது. அத்துடன், இலங்கையும் எப்போதும் சீனாவுடன் நட்பாகவே இருந்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையின் இறையாண்மை சுதந்திரம் மற்றும் தேசிய கண்ணியத்தைப் பாதுகாப்பதில் சீனா உறுதியாக உள்ளது என்றும் சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் வெளியுறவு ஆணைக்குழுவின் அலுவலகத்தின் பணிப்பாளர் வாங் யீ தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...