அதிகாரப் பகிர்வின் மூலம் சுயநல அரசியல் இறங்கும் ரணில்
இலங்கைசெய்திகள்

அதிகாரப் பகிர்வின் மூலம் சுயநல அரசியல் இறங்கும் ரணில்

Share

அதிகாரப் பகிர்வின் மூலம் சுயநல அரசியல் இறங்கும் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது அதிகாரப் பகிர்வின் மூலமாக தனது சுயநல அரசியலையே முன்னெடுப்பதற்கு தயாராகி வருகின்றார் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பு – கோட்டையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று(14.08.2023) செய்தியாளர்களைச் சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது அதிகாரப் பகிர்வின் மூலமாக தனது சுயநல அரசியலையே முன்னெடுப்பதற்கு தயாராகி வருகின்றார்.
அவர் அதிகாரங்களைப் பகிர்வதாகக் கூறி, மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட மாகாண சபைகளுக்கு தேர்தலை நடத்தாது தனது தேர்தல் பரப்புரைக்காக ஆளுநர்கள் மற்றும் இதர தரப்பினருக்கு அதிகாரங்களை வழங்குவதற்கு முயல்கின்றார்.

ஆகவே இந்தச் செயற்பாடானது அதிகாரத்தினைப் பகிரும் செயற்பாடு அல்ல. அதிகாரத்தினை குவிப்பதாகும்.
அந்த விடயத்தினை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். மேலும், அதற்கு நியாயமான பதில் அளிக்கப்பாடாது சர்வகட்சிக் கூட்டத்தினை நடத்துவதில் எவ்வித பயனுமில்லை என்ற முடிவினை நாம் கொண்டுள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...