பிரசவத்தில் திடீரென தரையில் விழுந்து சிசு உயிரிழப்பு
இலங்கைசெய்திகள்

பிரசவத்தில் திடீரென தரையில் விழுந்து சிசு உயிரிழப்பு

Share

பிரசவத்தில் திடீரென தரையில் விழுந்து சிசு உயிரிழப்பு

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது வைத்தியசாலை அதிகாரிகளின் அலட்சியத்தால் சிசுவொன்று தரையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த 10 ஆம் திகதி கல்லஞ்சிய பகுதியைச் சேர்ந்த ரம்பேவ, டி. அது. தக்சிலா உதயங்கனி என்ற 35 வயதுடைய கர்ப்பிணி பெண் முதல் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அன்றைய தினமே அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் மகப்பேறு விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதன்போது பிரசவத்தில் செவிலியர்களின் அலட்சியத்தால் சிசு தரையில் விழுந்துள்ளது.

குறித்த சிசு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சுமார் மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்துள்ளது.

அநுராதபுரம் வைத்தியசாலையில் இருந்து பெறப்பட்ட தாயின் நோய் குறிப்பிலும் பிரசவத்தின் போது குழந்தை தரையில் விழுந்து குழந்தையின் தலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தை பிறக்கும் போது அழவில்லை என்றும், இதயக் கோளாறு காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் இறப்புச்சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அவசர அறிக்கையை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...