நாட்டு மக்களுக்கு பொலிஸ் அவசர பிரிவு எச்சரிக்கை!
இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களுக்கு பொலிஸ் அவசர பிரிவு எச்சரிக்கை!

Share

நாட்டு மக்களுக்கு பொலிஸ் அவசர பிரிவு எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் அவசர சேவை தொலைபேசி எண்ணான 119 எனும் எண்ணை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

குறித்த அவசர இலக்கமானது 24 மணி நேரமும் இயங்கி வருவதாகவும், நாளாந்தம் 3,000 முதல் 3,500 அழைப்புகள் வரை இதற்கு அழைப்பு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய குறிப்பிட்ட கால இடைவெளியில் தரவுகளை ஆய்வு செய்த போது, சில நபர்கள் இந்த வசதியை தவறாகப் பயன்படுத்தியதைக் கண்டறிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் அவசர சேவை, அதிகாரிகள் அவசர சேவை மற்றும் அத்தியாவசியமான சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் தொலைபேசி அழைப்புக்களுக்கு இடையூறாக அமையும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய அவசர மற்றும் அத்தியாவசியமான சம்பவங்கள் குறித்து முறைப்பாடு தெரிவிப்பதற்கு மாத்திரம் அவசர தொலைபேசி எண்ணை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...