செப்டெம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் நடவடிக்கை
இலங்கைசெய்திகள்

செப்டெம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் நடவடிக்கை

Share

செப்டெம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் நடவடிக்கை

இறக்குமதி தடை தொடர்பில் புதிய அறிவிப்பொன்றை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்டுள்ளார்.

அதன்படி மேலும் 300 பொருட்களின் இறக்குமதி தடைகளை தளர்த்த தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

செப்டெம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன் சில பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

அதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் திகதி சுமார் 1465 பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்திருந்தது.

இந்த நிலையில் தற்போது பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி தடைகள் நீக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

என்ற போதும் வாகன இறக்குமதி குறித்த சாதகமான கருத்துக்கள் எவையும் முன்வைக்கப்படவில்லை.

இதேவேளை வாகனங்களை மீண்டும் எப்போது இறக்குமதி செய்ய முடியும் என்பது குறித்து தற்போதைக்கு உறுதியான அறிவிப்பை வெளியிட முடியாது என வாகன இறக்குமதியாளர்கள் சங்கமும் அண்மையில் குறிப்பிட்டிருந்தது.

அத்துடன், வாகன இறக்குமதியின் போது நாட்டுக்கு பொருத்தமற்ற வாகனங்களை இறக்குமதி செய்ததன் மூலம் பெருமளவிலான வெளிநாட்டு பணம் நாட்டை விட்டு வெளியேறியதாக சங்கத்தின் தலைவர் சம்பத் மெரெஞ்சி சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...