இலங்கைசெய்திகள்

தியானத்தில் இருந்த பௌத்த தேரருக்கு நேர்ந்த கதி

Share
தியானத்தில் இருந்த பௌத்த தேரருக்கு நேர்ந்த கதி
தியானத்தில் இருந்த பௌத்த தேரருக்கு நேர்ந்த கதி
Share

தியானத்தில் இருந்த பௌத்த தேரருக்கு நேர்ந்த கதி

அம்பாறை – பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள மகா விகாரையின் பௌத்த தேரர் ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்து பணம் மற்றும் தொலைபேசியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இவ்வாறு கொள்ளையிட்டுச் சென்றதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் சிலரை பொத்துவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட எட்டுச் சந்தேக நபர்களும் பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் 34, 40, 39, 34, 38, 43 மற்றும் 56 வயதுடையவர்களாவர்.

பொத்துவில் – முஹுது மகா விகாரையின் காட்டுப் பகுதியில் உள்ள பாறைக் குகை ஒன்றில் தியானம் செய்து கொண்டிருந்தபோதே தேரரிடமிருந்து 57,000 ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களால் கொள்ளையிடப்பட்ட கைத்தொலைபேசி மற்றும் பணத்தை கைப்பற்றிய பொத்துவில் பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...