தென்னிலங்கையில் புறக்கணிக்கப்பட்ட ராஜபக்சக்கள்
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் புறக்கணிக்கப்பட்ட ராஜபக்சக்கள்

Share

தென்னிலங்கையில் புறக்கணிக்கப்பட்ட ராஜபக்சக்கள்

மாத்தறை மகிந்த ராஜபக்ச வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ராஜபக்சக்கள் எவரும் அழைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மகிந்த ராஜபக்ச வித்தியாலயத்தில் கடந்த வாரம் பரிசளிப்பு விழா ஒன்று இடம்பெற்றுள்ளது.

எனினும் இந்த நிகழ்வுக்கு ராஜபக்ச சகோதரர்கள் யாரும் அழைக்கப்படவில்லை எனவும், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, டலஸ் அழகப்பெரும ஆகியோர் மாத்திரமே அழைக்கப்பட்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பாடசாலையின் தற்போதைய அதிபராக இருப்பவர் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. ஒருவரின் உறவினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு முடிவிற்கு வந்த மகிந்தராஜபக்சவின் நீண்ட கால ஆட்சியின் குணாதியசங்களாக குடும்ப ஆட்சி காணப்பட்டது.

நான்கு சகோதரர்கள் அரசாங்கத்தின் பெரும்பான்மையான அமைச்சுகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்ததுடன்,பொது நிதியில் 80 வீதத்தினையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர்.

ஜனாதிபதியின் அதிகாரத்தை மெல்லமெல்ல அதிகரித்ததன் மூலம் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகளையும் யுத்த குற்றச்சாட்டுகளையும் சந்தித்த அரை சர்வாதிகார ஆட்சியை மகிந்த உருவாக்கினார்.

மேலும் மகிந்தவின் சீனா ஆதரவு கொள்கை இலங்கையில் சீனா தனது செல்வாக்கை மிகவேகமாக பரப்புவதற்கு உதவியது.

இலங்கையின் 25 வருடகால யுத்தம் 2009 இல் முடிவிற்கு வருவதை மகிந்தராஜபக்ச மேற்பார்வை செய்தார். எனினும் அவர் சமாதானத்தின் முகவர் இல்லை என தமிழ் தரப்புக்களால் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் அதிகளவிற்கு இந்துக்களான தமிழர்கள் மீது பாரிய கொடுமைகளை இழைத்தபோதிலும் ராஜபக்ச குடும்பத்தவர்கள் இலங்கையின் சிங்கள பெரும்பான்மையினத்தவர்களின் கதாநாயகர்களாக மாறினார்கள்.

இது பல்லின தேசமென்ற என்ற இலங்கையின் அடையாளத்திற்கு பதில் ஒரு இனத்திற்கான தேசமென்ற அடையாளத்தை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொள்வதற்கான துணிச்சலை மகிந்தராஜபக்சவிற்கு வழங்கியது.

ஆனால் கடந்த வருடம் இடம்பெற்ற அரகலய போராட்டம் இவை அனைத்திற்கும் முட்டுக்கட்டை போட்டது.

இந்நிலையில் 18.09.2019 இல் இலங்கையின் ஜனாதிபதியாக ஆட்சிபீடம் ஏறிய கோட்டாபய ராஜபக்சவும், யுத்த வெற்றியை வைத்து ஆட்சிசெய்த மகிந்த ராஜபக்சவும் அவரது குடும்பமும் நாட்டு மக்களால் துரத்தியடிக்கப்பட்டனர்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...