எதிர்வரும் ஆண்டின் ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தல்
இலங்கைசெய்திகள்

எதிர்வரும் ஆண்டின் ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தல்

Share

எதிர்வரும் ஆண்டின் ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தல்

திர்வரும் ஆண்டின் ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு முயற்சிக்கப்படுவதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது குறித்து தமக்கு உடனடியாக அறிக்கை தருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தல் ஆணைக்குழுவிடம் இந்த கோரிக்கையை அவர் விடுத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்னநாயக்க உள்ளிட்ட ஆணைக்குழுவின் உறுப்பினர்களை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்து இந்த விடயம் குறித்து அவர் கோரியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு தேவைப்படும் நிதி தொடர்பில் ஓர் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய, வரவு செலவு திட்டத்தில் அதனை உள்ளடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நிதி ஒதுக்கீட்டு தொடர்பில் நிதி அமைச்சுடனும் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாகவும் செலவு விவரங்களை நிதி அமைச்சுக்கு வழங்குமாறும் ஜனாதிபதி கோரியுள்ளார் என கூறப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலுக்கு செலவாகும் தொகையை மதிப்பீடு செய்து அதனை கூடிய விரைவில் நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்க உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...

22727102 s
செய்திகள்விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் கால்பந்து அட்டவணை வெளியீடு: 48 அணிகள் பங்கேற்கும் திருவிழா ஜூன் 11 இல் ஆரம்பம்!

உலக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிபா...

images 4 2
உலகம்செய்திகள்

ஜப்பான் போர் விமானங்கள் மீது FCR ரேடார் மூலம் சீனா அச்சுறுத்தல்: பதற்றம் அதிகரிப்பு!

ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக...

articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக,...