download 10 1 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் கண்புரை சத்திரசிகிச்சை முகாம்!

Share

யாழில் கண்புரை சத்திரசிகிச்சை முகாம்!

யாழ் மாவட்டத்தில் கண்புரை சத்திரசிகிச்சை தேவைப்படுபவர்களுக்கான அடுத்த கட்ட சத்திரசிகிச்சை முகாம் யாழ் போதனா வைத்தியசாலையில் கண்சத்திரசிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மலரவனினால் எதிர்வரும் மே 18 ஆம் திகதி வியாழக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளது.

இச்சத்திர சிகிச்சைக்காக தெரிவுசெய்யப்பட்டவர்கள் இன்று புதன்கிழமை காலை 09 மணிக்கு கீழ்குறிப்பிடும் வைத்தியசாலைகளுக்கு சமூகந்தருமாறு யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெடுந்தீவு பிரதேசத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டவர்கள் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கும்  நயினாதீவு பிரதேசத்தில் இருந்து சத்திரசிகிச்சைக்காக தெரிவுசெய்யப்பட்டவர்கள் நயினாதீவு பிரதேச வைத்தியசாலைக்கும் அனலைதீவு பிரதேசத்தில் இருந்து சத்திரசிகிச்சைக்காக தெரிவுசெய்யப்பட்டவர்கள் அனலைதீவு பிரதேச வைத்தியசாலைக்கும் எழுவைதீவு  பிரதேசத்தில் இருந்து சத்திரசிகிச்சைக்காக தெரிவுசெய்யப்பட்டவர்கள் எழுவைதீவு ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கும் சமூகந்தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அங்கிருந்து இவர்களை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்ல இலவச போக்குவரத்து வசதிகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

சத்திரசிகிச்சைக்குப் பின்னர் இவர்களை மீள அந்தந்த வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தெரிவுசெய்யப்பட்ட நோயாளர்களுக்கு சுகாதாரத் திணைக்களத்தினால் தொலைபேசி மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே தெரிவு செய்யப்பட்ட நோயாளர்களை இன்று காலை 9 மணிக்கு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு உரிய நேரத்தில் சமூகம் தந்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றுள்ளது.

#srilankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...