download 10 1 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் கண்புரை சத்திரசிகிச்சை முகாம்!

Share

யாழில் கண்புரை சத்திரசிகிச்சை முகாம்!

யாழ் மாவட்டத்தில் கண்புரை சத்திரசிகிச்சை தேவைப்படுபவர்களுக்கான அடுத்த கட்ட சத்திரசிகிச்சை முகாம் யாழ் போதனா வைத்தியசாலையில் கண்சத்திரசிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மலரவனினால் எதிர்வரும் மே 18 ஆம் திகதி வியாழக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளது.

இச்சத்திர சிகிச்சைக்காக தெரிவுசெய்யப்பட்டவர்கள் இன்று புதன்கிழமை காலை 09 மணிக்கு கீழ்குறிப்பிடும் வைத்தியசாலைகளுக்கு சமூகந்தருமாறு யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெடுந்தீவு பிரதேசத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டவர்கள் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கும்  நயினாதீவு பிரதேசத்தில் இருந்து சத்திரசிகிச்சைக்காக தெரிவுசெய்யப்பட்டவர்கள் நயினாதீவு பிரதேச வைத்தியசாலைக்கும் அனலைதீவு பிரதேசத்தில் இருந்து சத்திரசிகிச்சைக்காக தெரிவுசெய்யப்பட்டவர்கள் அனலைதீவு பிரதேச வைத்தியசாலைக்கும் எழுவைதீவு  பிரதேசத்தில் இருந்து சத்திரசிகிச்சைக்காக தெரிவுசெய்யப்பட்டவர்கள் எழுவைதீவு ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கும் சமூகந்தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அங்கிருந்து இவர்களை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்ல இலவச போக்குவரத்து வசதிகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

சத்திரசிகிச்சைக்குப் பின்னர் இவர்களை மீள அந்தந்த வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தெரிவுசெய்யப்பட்ட நோயாளர்களுக்கு சுகாதாரத் திணைக்களத்தினால் தொலைபேசி மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே தெரிவு செய்யப்பட்ட நோயாளர்களை இன்று காலை 9 மணிக்கு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு உரிய நேரத்தில் சமூகம் தந்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றுள்ளது.

#srilankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...