20230508 112721 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வல்வெட்டித்துறையில் ஆரம்பமாகிறது முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்!

Share

வல்வெட்டித்துறையில் ஆரம்பமாகிறது முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்!

யாழ்ப்பாணம் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லத்திற்கு அருகில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்படவுள்ளது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து நாளை முதல் வரும் மே 15ம் திகதிவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.

இதன் முதல் நிகழ்வே நாளை (09) செவ்வாய்க்கிழமை காலை வல்வெட்டித்துறையில் இடம்பெறவுள்ளது.

தொடர்ச்சியாக மருதனார்மடம் சந்தியிலும் காரைநகர் இந்துக் கல்லூரி முன்பாகவும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாகவும் சாவகச்சேரி பேருந்து நிலையம் முன்பாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்படவுள்ளது.

புதன்கிழமை(10) காலை கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாகவும் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, மாங்குளத்திலும்

வியாழக்கிழமை (11) மன்னாரிலும் வவுனியாவிலும் கஞ்சி விநியோகிக்கப்படவுள்ளது.

வெள்ளிக்கிழமை (12) கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் சிவன் கோவில், அன்பொளிபுரம், பத்திரகாளி அம்மன் கோவில்,மூதூர் பகுதியிலும் இடம்பெறவுள்ளது.

சனிக்கிழமை (13) மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் பங்கேற்புடன் வந்தாறுமூலை வளாகம் முன்பாகவும் செங்கலடி, ஆரையம்பதி, மட்டக்களப்பு பிள்ளையார் கோவில் பகுதியிலும் ஞாயிற்றுக்கிழமை (14) அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் மற்றும் பொத்துவில் கஞ்சி விநியோகிக்கப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து மே 15 முதல் யாழ்ப்பாணத்தின் பாடசாலைகளை இலக்கு வைத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இதனை தெரிவித்தனர்.

#SriLAnkaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
கனமழை
இலங்கைசெய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

கிழக்கிலிருந்தான அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நிலவும்...

aswesuma 6 1
இலங்கைசெய்திகள்

முதியோருக்கான டிசம்பர் மாத ‘அஸ்வெசும’ கொடுப்பனவு: நாளை முதல் பெற்றுக்கொள்ள முடியும்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களில், 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கான டிசம்பர் மாதக்...

images 7 5
அரசியல்இலங்கைசெய்திகள்

அனர்த்த நிவாரணத்திற்காக 500 பில்லியன் ரூபா குறைநிரப்பு மதிப்பீடு: டிசம்பர் 18ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுகிறது!

பிரதமரின் கோரிக்கைக்கு இணங்க, நாட்டின் தற்போதைய அவசர அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு நாளையும் (18) நாளை...

25 693893d136522 md
அரசியல்இலங்கைசெய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிவாரண உதவி 2.35 மில்லியன் யூரோவாக அதிகரிப்பு: சிறப்பு விமானம் இலங்கை வந்தடைந்தது!

இலங்கையில் நிலவும் அனர்த்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, ஐரோப்பிய ஒன்றியம் (EU) வழங்கவிருந்த நிதியுதவியை 2.35 மில்லியன்...