இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிரிக்கட் மட்டையால் தாக்கப்பட்ட மாணவனுக்கு நேர்ந்த நிலை!

wf1kXtqTxfNR9GlmlP08 1
Share

களுத்துறை திஸ்ஸ தேசிய பாடசாலைக்கும் களுத்துறை தேசிய பாடசாலைக்கும் இடையேயான ஒரு நாள் கிரிக்கட் போட்டியின் போது கிரிக்கட் மட்டையினால் தாக்கப்பட்ட திஸ்ஸ தேசிய பாடசாலையின் உப தலைவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மக்கோன காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

மக்கோன பகுதியில் இடம்பெற்ற இந்த கிரிக்கட் போட்டியில் திஸ்ஸ தேசிய பாடசாலை அணி முதலில் துடுப்பாடியதுடன் பதிலளித்தாடிய களுத்துறை தேசிய பாடசாலை அணி இறுதி ஓவரில் வெற்றியிலக்கை கடந்து வெற்றியை பதிவு செய்தது.

அதன் பின்னர் மைதானத்தின் நடுவே பொருத்தப்பட்டிருந்த விக்கட்டுக்களை மாணவர்கள் அப்புறப்படுத்தியதால் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் திஸ்ஸ தேசிய பாடசாலையின் உப தலைவரை சிலர் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இச் சம்பவத்தில் பாதிப்படைந்த அவர், நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

#srilankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...