tZH04oGFXEa090amzmVe
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கையடக்கத் தொலைபேசி கொள்வனவு செய்தவருக்கு பெரும் அதிர்ச்சி!

Share

கையடக்கத் தொலைபேசி கொள்வனவு செய்தவருக்கு பெரும் அதிர்ச்சி!

இரத்தினபுரியில் கொரியர் சேவை மூலம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசி கொள்வனவு செய்தவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தொலைபேசி பார்சலை பெற்றுக்கொண்ட பாடசாலை மாணவர் ஒருவர் அதனை திறந்து பார்த்தபோது தண்ணீர் போத்தல் மற்றும் வைக்கோல் இருந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட விளம்பரத்தின் மூலம் கையடக்கத் தொலைபேசிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொலைபேசியின் விலை 60 ஆயிரம் ரூபா என்று விண்ணப்பதாரருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரருக்கு கையடக்க தொலைபேசி பார்சல் விநியோகம் செய்யப்பட்டதாக குறுந்தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவர் விண்ணப்பித்தவரின் பெயருக்கு வந்த பார்சலை வழங்கிவிட்டு 61,000 ரூபாய் பெற்றுக் கொண்டுள்ளார்.

அவரும் கொரியர் நிறுவனத்துக்கு சொந்தமானது என்று ரசீது கொடுத்துவிட்டு சென்றார். கையடக்கத் தொலைபேசி அடங்கிய பார்சலை திறந்து பார்த்தபோது பார்சலுக்குள் வைக்கோல் மற்றும் சிறிய தண்ணீர் பாட்டில் ஒன்றும் இருந்துள்ளது.

இதற்காக கிடைத்த ரசீது குறித்தும் கொரியர் நிலையத்திற்கு சொந்தமானது எனக்கூறி விசாரித்தபோது அது உண்மையல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...