tZH04oGFXEa090amzmVe
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கையடக்கத் தொலைபேசி கொள்வனவு செய்தவருக்கு பெரும் அதிர்ச்சி!

Share

கையடக்கத் தொலைபேசி கொள்வனவு செய்தவருக்கு பெரும் அதிர்ச்சி!

இரத்தினபுரியில் கொரியர் சேவை மூலம் பெறுமதியான கையடக்கத் தொலைபேசி கொள்வனவு செய்தவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தொலைபேசி பார்சலை பெற்றுக்கொண்ட பாடசாலை மாணவர் ஒருவர் அதனை திறந்து பார்த்தபோது தண்ணீர் போத்தல் மற்றும் வைக்கோல் இருந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட விளம்பரத்தின் மூலம் கையடக்கத் தொலைபேசிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொலைபேசியின் விலை 60 ஆயிரம் ரூபா என்று விண்ணப்பதாரருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரருக்கு கையடக்க தொலைபேசி பார்சல் விநியோகம் செய்யப்பட்டதாக குறுந்தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவர் விண்ணப்பித்தவரின் பெயருக்கு வந்த பார்சலை வழங்கிவிட்டு 61,000 ரூபாய் பெற்றுக் கொண்டுள்ளார்.

அவரும் கொரியர் நிறுவனத்துக்கு சொந்தமானது என்று ரசீது கொடுத்துவிட்டு சென்றார். கையடக்கத் தொலைபேசி அடங்கிய பார்சலை திறந்து பார்த்தபோது பார்சலுக்குள் வைக்கோல் மற்றும் சிறிய தண்ணீர் பாட்டில் ஒன்றும் இருந்துள்ளது.

இதற்காக கிடைத்த ரசீது குறித்தும் கொரியர் நிலையத்திற்கு சொந்தமானது எனக்கூறி விசாரித்தபோது அது உண்மையல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...