ACbPBInEO5gPSCQ3lvGK 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நீதிமன்ற பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த பணம் மாயம்!

Share

சிலாபம் மாரவில நீதிமன்றத்தின் பெட்டகத்தில் இருந்த 22 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் காணாமல் போன சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் பணிப்புரியும் பெண் உட்பட இரண்டு ஊழியர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

நீதிமன்ற பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 22 லட்சத்து 7 ஆயிரம் ரூபா காணாமல் போயுள்ளதாக மாரவில நீதிமன்ற பதிவாளர் சாகரிகா மானேல் விக்ரமசிங்க கடந்த 20 ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

பெட்டகத்திற்கு பொறுப்பாக ஒரு ஆண் ஊழியரும் பெண் ஊழியரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாகவும் பதிவாளர் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், நீதிமன்றத்தில் பணிப்புரியும் சில ஊழியர்களிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலங்களை பெற்றுள்ளனர்.

இதனையடுத்து மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் பின்னர், பெட்டகத்திற்கு பொறுப்பாக இருந்த ஆண் ஊழியரையும் பெண் ஊழியரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...