ACbPBInEO5gPSCQ3lvGK 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நீதிமன்ற பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த பணம் மாயம்!

Share

சிலாபம் மாரவில நீதிமன்றத்தின் பெட்டகத்தில் இருந்த 22 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் காணாமல் போன சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் பணிப்புரியும் பெண் உட்பட இரண்டு ஊழியர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

நீதிமன்ற பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 22 லட்சத்து 7 ஆயிரம் ரூபா காணாமல் போயுள்ளதாக மாரவில நீதிமன்ற பதிவாளர் சாகரிகா மானேல் விக்ரமசிங்க கடந்த 20 ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

பெட்டகத்திற்கு பொறுப்பாக ஒரு ஆண் ஊழியரும் பெண் ஊழியரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாகவும் பதிவாளர் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், நீதிமன்றத்தில் பணிப்புரியும் சில ஊழியர்களிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலங்களை பெற்றுள்ளனர்.

இதனையடுத்து மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் பின்னர், பெட்டகத்திற்கு பொறுப்பாக இருந்த ஆண் ஊழியரையும் பெண் ஊழியரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 3
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தேசிக்காயின் விலை

இலங்கையில் தேசிக்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதன்படி, ஒரு கிலோ கிராம் தேசிக்காய்...

20 5
இலங்கைசெய்திகள்

விடுதலை புலிகளின் தலைவர் குறித்து சரத் பொன்சேகா புகழாரம்

போர்க் களத்தில் இருந்து தப்பியோடாமல், இறுதி வேட்டு வரை போராடி உயிர் நீத்தமைக்காக விடுதலைப்புலிகளின் தலைவர்...

19 6
இந்தியாசெய்திகள்

கரூர் விவகாரத்தில் புதிய திருப்பம்: உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

கரூரில் தவெக சார்பில் நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

18 7
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்திருந்தால் அவருக்கும் அமைச்சர் பதவி..!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், மகிந்தவின் அரசில் அவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கும்...